திருச்சி, ஏப்ரல் 11 –
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (26) என்பவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 6-ஆம் தேதி ராஜேஷ் தூங்கும்போது அவரது ஆடை விலகியதால் சக கைதிகளான கொம்பன் கார்த்தி (22), மகேஷ் (21), சண்முகவேல் (22) ஆகியோர் அவரை கேலி செய்துள்ளனர்.
இதுகுறித்து ராஜேஷ் சிறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் ராஜேஷை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



