நல்லூர், மார்ச் 7 –
சகாய நகர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு உபகரணங்கள் கேட்டு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திருமலைபுரம் இளைஞர்களுக்கு தோவாளை முகாம் அலுவலகத்தில் வைத்து கிரிக்கெட் பேட், ஸ்டம்ப், பந்து, கை பாதுகாப்பு உறை போன்றவைகள் அடங்கிய பையை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



