இரணியல், மார். 26 –
இரணியல் அருகே சுக்கான் கடை ஐக்கிய புரம் என்ற இடத்தில் சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி இறந்து கிடப்பதாக இரணியல் காவல் நிலையத்தில் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இரணியல் போலீஸ் உதயம் பிணத்தை கைப்பற்றி ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வில்லுக்குறி சரல்விளை பகுதியில் சேர்ந்த கமலேசன் (60) தனது தாயாரை காணவில்லை என்று இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இரணியல் போலீஸ் ஏற்கனவே எடுத்த போட்டோ காண்பித்த போது இறந்தவர் அவரது தாயார் அம்மாள் (82) என்று உறுதி ஆனது. இது குறித்து இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



