கன்னியாகுமரி, ஜூலை 13 –
அழகப்பபுரம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது அதன்படி இன்று அழகப்பபுரம் பேரூராட்சி 15 வது வார்டில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டம் மூலம் ஒரு கோடியே 96 லட்சத்தில் நவமணி சாலை மற்றும் வளன் நகர் சாலைகள் செப்பெனிடப்பட்டு இன்று தார் சாலை பணிகளை அழகப்பாபுரம் பேரூராட்சி தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் மணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, 15 ஆவது வார்டு கவுன்சிலர் ஜார்ஜ் மலர்கொடி, பொறியாளர் மேற்பார்வையாளர் விஜயகுமார், ஒப்பந்தக்காரர் கைலாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



