தருமபுரி, மே 28 –
தருமபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னே மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பொழிந்து வருகின்றது. இதனை பயன்படுத்தி கோடை உழவு நடந்து வருகிறது. ஆனால் முழுமையாக நடைபெறவில்லை. அதனால் முழுமையாக நடைபெற விவசாயிகளுக்கு கடந்தாண்டு ஏக்கருக்கு ரூ. 800 கோடை உழவு மானியம் வழங்கப்பட்டது. இதில் ஒரு ஏக்கரை உழவு முடியாது.
ஒரு ஏக்கரை ஒரு இரண்டு சால் டிராக்டரில் உழவு செய்ய ரூ 2,600 ஆகும். பின் பதினைந்து தினங்களுக்குள் இன்னொரு முறை உழவு செய்தால் ரூ. 2,600/- ஆகும். அதனால் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகள் கோடை உழவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 5000 (ஐந்தாயிரம்) வழங்க மாவட்ட நிர்வாகம் புதிய தமிழ்நாடு அரசின் முதல்வர் C . ஜோசப் விஜயிக்கு பரிந்துரை செய்து பெற்று தருமாறு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறது.


