மார்த்தாண்டம், ஜன. 6 –
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் உங்கள் ஊர் மோடி பொங்கல் விழா மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி கோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.ஆர். காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் மற்றும் விவசாயம் மற்றும் விவசாய்களை பாதுகாக்க ஆண்டிற்கு மூன்று தவணையாக இரண்டாயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மோடி அரசு ஆறாயிரம் வழங்கி விவசாய்களை பாதுகாத்து வருகிறது. மத்திய மோடி அரசு அரிசி உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடம் பிடித்து உள்ளது. ஆகவே நம்ம ஊர் மோடி பொங்கல் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பின் மூலம் நீதி வென்று உள்ளது. தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றம் சுட்ட பதில் அடி கொடுத்து உள்ளது உடனே நீதிமன்ற தீர்ப்பை மதித்து அந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் நிகழ்வில் பக்தர்களை அவதூறு பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வரும் 9 தேதி பத்மநாபபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.



