சென்னை, மார்ச் 28 –
அஇஅதிமுகவின் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலின் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுகவின் பொதுசெயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதன்படி திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளரான எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக விவசாய பிரிவு இணை செயலாளருமான கே.பி.பரமசிவம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜன், தாராபுரம் (தனி) தொகுதியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளர் சத்தியபாமா, உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்னர்.



