தஞ்சாவூர், மார்ச் 24 –
தஞ்சாவூரில் கடந்த மார்ச் 4ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சி கல்கண்டார் கோட்டையை சேர்ந்த பால் வியாபாரியின் மகன் கல்லூரி மாணவர் விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து, தொடர்ந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி மார்ச் 23 மாலை உயிரிழந்தார்.



