கோவை, ஜூலை 24 –
காரமடை டாக்டர்.ஆர்.விகலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உமாப்ரியா அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். மேட்டுப்பாளையம் மண்டலப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், இன்றைக்கு ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விபத்தினால் உயிரிழக்கின்றனர்.
செல்போன் உபயோகம்,விளம்பரப் பலகைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வது,மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவது மற்றும் போதைப் பொருள் உபயோகிப்பது விபத்தை ஏற்படுத்தும். வாகன ஓட்டிகள் முறையாக லைசென்ஸ் பெற்றும்,தலைக்கவசம் அணிந்தும், வேகத்தை குறைத்தும், சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் வாகனத்தை இயக்கினால் விபத்தை தவிர்க்க முடியும்” என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



