சேலம், ஜூன் 9 –
சேலம் சரக அலுவலகம் மற்றும் சேலம் மாவட்ட ஆயுதப்படை, காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்களை தற்போது பழுது அடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக 15.6.2026 தேதி காலை சுமார் 10 மணிக்கு சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகம் மற்றும் சரக காவல் அலுவலத்தில் ஏலம் விடப்பட உள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
மேலும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அரசு விதிகள் மற்றும் அரசு வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதி சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் பழைய கணினிகள், துணைக் கருவிகள் மற்றும் சாதனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் ஏல விடும் நாளன்று காலை ரூ.500/= ஐ முன்வைப்புத் தொகையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். சேலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம் எடுத்தவர்கள் மற்றும் பொருட்களுக்கு உரிய ஜி.எஸ்.டி தொகையுடன் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.


