திருச்சி, ஜூன் 8 –
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தோலூர் பட்டி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் இருப்பதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கூறி, முசிறி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுவை அளித்தனர். இந்த டாஸ்மாக் கடையை அமைக்கக் கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



