களியக்காவிளை, அக். 27 –
களியக்காவிளையை அடுத்த மீனச்சல் இடைகெட்டிவிளையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (48). இவரது மகன் அபிஷேக் (23), கொத்தனார். இவர் ஏதோ ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் கடந்த சில நாட்களாக இவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக வீட்டில் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தூங்க சென்றவர் நேற்று வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


