திருப்பூர், ஜூன் 01 –
திருப்பூரில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் தொண்டு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
விழாவில் சேலம் ரயில்வே கோட்டம் DRUCC உறுப்பினர் ஜே.வி. சுரேஷ் குமார் கலந்துகொண்டு விழிப்புணர்வு முகாமினை திறந்து வைத்து துண்டு பிரசுரம் வழங்கினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மது பாட்டில் வடிவமைத்த அட்டைப்பெட்டி மூலம் மது ஒழிப்பு பாடலுக்கு நடனமாடி ராவணன் வேடமடைந்து மது அரக்கனை அளிப்பது போன்று நாடகம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழாவில் பிரம்ம குமாரிகள் தொண்டு அமைப்பு ரமா பிரதா, கிருஷ்ணன், நாகேந்திரன், சிவமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



