களியக்காவிளை, மே 20 –
களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியில் அருள்மிகு இசக்கி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் தினசரி காலை மாலை பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பூஜாரி கோயிலில் நேற்று பூஜை முடிந்த பின்பு கதவை சாத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் சென்று பார்த்த போது கோயிலின் வெளிப்புறத்தில் இருந்த 36 1/2 கிலோ வெண்கல குத்துவிளக்கை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் தலைவர் குமார் சிங் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேக்கோடு, பரம்பு வளாகம் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் (34) என்ற கொத்தனார் அந்த விளக்கை திருடி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து விளக்கை பறிமுல் செய்த போலீசார் ஆல்வினை கைது செய்தனர்.


