திருச்சி, ஜூன் 4 –
திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலையெடுப்பு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர், பிரிந்து சென்ற தனது மனைவி லாவண்யாவை சேர்ந்து வாழ அழைத்தபோது, அதற்கு தடையாக இருந்த மாமியார் சுதாவை வெட்டி படுகொலை செய்த குற்றத்திற்காக 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, நீதிமன்றம் குற்றவாளி வெங்கடாசலத்திற்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.



