கன்னியாகுமரி, மார்ச் 18 –
அழகப்பபுரம் கிளை நாடார் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் அழகப்பபுரத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு நாடார் மகாஜன சங்க தலைவர் அருள் ராஜேஷ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஜாண் போஸ்கோ, சங்க சட்ட ஆலோசகர் தாமஸ் எடிசன், சங்க மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் கில்மன் புரூஸ் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விக்டர் நவாஸ் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் பாபுஜி பிலிப்ஸ் நிகழ்ச்சி நிரலை தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தனர்களாக அசோகன், சுப்பிரமணயன், கணேசன், முருகன், டேவிட் லீஜ், மதன்குமார், மெரின் கிறிஸ்டோபர், ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜாக்குலின் ஆஷா, ஜாண் ஜஸ்டின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணைச் செயலாளர் ஜாண் போஸ்கோ, பொருளாளர் விஜிலா மைக்கிள் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.
சங்கத்திற்கு அதிகமான உறுப்பினர்களை சேர்த்த செயற்குழு உறுப்பினர் மரிய இருதய சுனிதாவுக்கு சிறந்த செயல் வீராங்கனை என்ற பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. தலைவர் அருள் ராஜேஷ் தலைமை உரையாற்றினார். ஜோஸ்பின் மேரி ஸ்டெல்லா நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜோசப் சேகர், ஜாண் சேவியர் எட்மண்ட், இன்னாசென்ட் இளங்கோ, டென்னிஸ் பிரின்ஸ், சகாய டென்னிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



