தஞ்சாவூர், மே 29 –
தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டைச்சுவர் தூய்மை பணி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொல்லியல் துறைக்கு இடையே கருத்து மோதல் வலுவடைந்து வருகிறது.
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றி உள்ள அகழியில் தூய்மை பணி மே 16ம் தேதி தொடங்கி நிறைவடைந்துள்ளது. இது நிறைய கோயிலை சுற்றி 16ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி காலத்தில் எழுப்பப்பட்ட கோட்டை சுவரில் வளர்ந்துள்ள செடிகள் மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் கட்டுமான பாதிக்கப்படுவதாக கூறி இப்பணியை நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திடம் இந்திய தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கோட்டை சுவரின் தூய்மை பணி நிறுத்தப்பட்டது.
மேலும் கோயில் மராட்ட வாயிலுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பக்தர்களுக்கான கட்டணம் இல்லா காலணிகள் வைப்பகம் மே 26ம் தேதி தொடங்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணம் இல்லாத காலணிகள் வைப்பதும் அமைக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு கலெக்டருக்கு தொல்லியல் துறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த இரு பிரச்சனைகள் மாவட்ட நிர்வாகத்துக்கும் தொல்லியல் துறைக்கும் இடையே கருத்து மோதல் வலுவடைந்து வருகிறது.
இந்த நிலையில் அகழியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணி குறித்து தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி ஆய்வு செய்தார். இவருடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் சென்றனர்.
அப்போது மக்களவை உறுப்பினர் தூய்மைப்பணி இந்திய தொல்லியல் துறை இடையூறாக இருப்பதாக மாவட்ட கலெக்டர் கூறினார். இதற்கு பதில் அளித்த தொல்லியல் துறை அலுவலர்களிடம் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு தலைமையகத்தில் பேசி உரிய அனுமதியை பெற்றுத் தருமாறு மக்களை உறுப்பினர் அறிவுரை வழங்கினார்.
மேலும் தொல்லியல் துறை அலுவலரிடம் இந்த கோயில் சிதைந்துள்ள கல்வெட்டுகளை சீரமைக்கு முன் வரவில்லை. இதுபோல கட்டுமானங்களிலும் சேதமடைந்து வருகிறது. கோட்டைச் சுவரில் வளர்ந்துள்ள மரங்களால் கோபுரம் மறைக்கிறது. கோட்டை சுவர் வளர்ந்துள்ள மரங்கள் கோபுரத்தை மறைக்கிறது. அதை அகற்றவில்லை கோபுரம் கருப்பாக மாறி வருவதையும் சுத்தம் செய்யவில்லை, வராகி அம்மன் சன்னதி அருகே அபிஷேக நீர் வெளியேறி தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதையும் தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையெல்லாம் விட்டுவிட்டு இந்து ஆகமத்துக்கு எதிராக கோபுர வாசலை கடந்து காலணிகள் பாதுகாப்பகம் எப்படி அமைத்தீர்கள்? அதை ஏன் வாயிலுக்கு வெளியில் அமைக்கவில்லை? அதை ஏன் வாயிலுக்கு வெளியில் அமைக்கவில்லை? மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு தொல்லியல் துறை முட்டுக்கட்டையாக இருப்பது ஏன்? என மாவட்ட கலெக்டர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்கள் விளக்கம் அளிக்கையில்: அகழியில் சுத்தம் செய்யும் போது பொக்லின் இயந்திரம் மூலம் சுண்ணாம்பு பாறையை வெட்டி சிதைத்துள்ளனர். இதனால் கோவில் கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் சிலை பகுதியை சுத்தம் செய்து வாகனங்களை நிறுத்தி மாவட்ட நிர்வாகம் கட்டணம் வசூலித்துள்ளது.
இந்திய தொல்லியல் துறையில் உயர் அலுவலர்களை மாவட்ட கலெக்டர் தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்கினால் கீழ் நிலையில் உள்ள நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால் மாவட்ட கலெக்டர் எங்களிடம் கூறி நீங்களாகவே அனுமதி பெற்று தாருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் உயர் அதிகாரியிடம் கேட்டால் தொல்லியல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுமாறு கூறுகின்றனர். இதெல்லாம் நாங்கள் இருபுறமும் பதில் கூற முடியாமல் வேதனையில் உள்ளோம் என்றார். பின்னர் கோயிலுக்குள் மக்களவை உறுப்பினர், தொல்லியல் துறை அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அழைத்துச் சென்றார்.



