மார்த்தாண்டம், ஜூன் 8 –
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ் மகன் அபிஷ் (18). இவர் கல்லூரியில் லேப் டெக்னீசியன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தனது நண்பரான ஆலஞ்சி பகுதியை சேர்ந்த லியோ டெப்ரின் (17) என்பருடன் பைக்கில் கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து 2 பேரும் ஊருக்கு திரும்பி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை அபிஷ் ஓட்டினார். லியோ டப்ரின் பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.
களியக்காவிளை அருகே செங்கவிளை பைபாஸ் சாலை பகுதியில் வரும்போது திடீரென பைக் நிலை தடுமாறியதில் சாலையில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். இதை அடுத்து அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அபிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லியோ டெப்ரின் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


