By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – நாதக மாநில நிர்வாகி மரியா ஜெனிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – நாதக மாநில நிர்வாகி மரியா ஜெனிபர்
கனஂனியாகுமரி

கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – நாதக மாநில நிர்வாகி மரியா ஜெனிபர்

Last updated: July 25, 2025 7:44 pm
July 25, 2025
38 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 25 –

குமரி மாவட்டம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கூறியதாவது: கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் பாதிக்கப்படுவதும் மீனவர்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்பதும் தொடர்ந்நு நடைபெற்று வருகிறது. புத்தன் துறை பகுதியில் கடல் அரிப்பு காரணமாக 13 வீடுகள் பாதிக்கப்பட்டதால் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதியில் கடலரிப்பால் பாதிப்பு வரவிருக்கிறது என கடந்த வருடமே முறையிட்டு ஒரு தற்காலிக அலை தடுப்பு சுவராவது அமைத்து தரவேண்டி கிராம மக்களும் மீனவர் நல அமைப்புகளும் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் சம்மந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுக்கு நிதி வேண்டி விண்ணப்ப கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இக்கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. மாநில அரசின் அலட்சியப் போக்காலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான போதிய அழுத்தம் கொடுக்கப்படாததாலும், சட்டமன்ற உறுப்பினரான தளவாய் சுந்தரத்திற்கு இப்பிரச்சினை குறித்தான எவ்வித அக்கறையும் இல்லாததாலும் இன்று இம்மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நடுச்சாலையில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பகுதிகளில் இடம் தருவதாக சமரசம் பேசுகிறார். கடலரிப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் கடலரிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளை ஆய்வுசெய்து கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டமன்றத்தில் இது குறித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் வாய் திறக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் பெயரளவு நடவடிக்கைகளுடன் விட்டு விடுகிறது. நிரந்தர தீர்வு காண முயற்சிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் நாம் தமிழர் கட்சி என்றும் துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும், இந்த கடலரிப்பு பிரச்சினைக்கான நிரந்தர தீர்வும் கிடைக்கும் வரை அதற்கான அரசியல் அழுத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருப்போம் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன், மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன், செய்தி தொடர்பாளர் ஜியோ டியோ, ராஜாக்கமங்கலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
மார்த்தாண்டத்தில் மனைவி கண்முன் கணவர் உயிரிழப்பு
ஊர் கண்காணிப்பாளர் திட்டத்தில் நான்கு கேமராக்களை கன்னியாகுமாரி டிஎஸ்பி மகேஷ் குமார் செயல்பாட்டிற்கு திறந்து வைத்தார்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிபாடு

September 24, 2024
70 Views
தூத்துக்குடியில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள்
வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்துபுகார் தெரிவிக்கலாம்
புதிய பேவர் பிளாக் நடைபாதை அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account