திருப்பூர், ஜூன் 26 –
மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தலைமையில் திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா அரசு கலை கல்லூரி வளாகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் (திருப்பூர் தெற்கு) எஸ்.பாலமுருகன், (திருப்பூர் வடக்கு) வி.சத்யபாமா, (பல்லடம்) ராம்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் இராஜராஜன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



