தருமபுரி, ஜூலை 30 –
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டலம் மற்றும் பொது விநியோகத் திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் சரவணன் ஆய்வு செய்தார். மாரவாடி பகுதியில் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் நெல் சேமிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 10, 437 மெட்ரிக் டன் நெல் முட்டைகள் மழைக்காலங்களில் நனையா வண்ணம் பாதுகாக்க வேண்டும். மழைநீர் வடியும் வண்ணம் வடிகால் அமைக்க வேண்டும்.
நெல் மூட்டைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க வேண்டும். காற்றோட்டத்துடன் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் இருப்பது அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நெல் சேமிப்பு மையப்பதிவேடுகளை மைய பொறுப்பாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று ஆட்சியர் கூறினார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் துரைசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



