திருச்சி, மே 25 –
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மணல் வியாபாரியிடம் மணல் அள்ள லஞ்சம் பெற்ற வீடியோ வெளியானது. இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர், சரவணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



