திருச்சி, ஏப். 22 –
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, வெளியூர் கட்சிக்காரர்கள் யாரும் தொகுதிக்குள் தங்கி இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன் பேரில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறி யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறிய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.



