மதுரை, ஜூலை 18 –
மதுரையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 2ம் நாளாக ரோஸ்கோர்ஸ் CE ஆபீஸ் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும், TNPSC மூலம் தேர்வு செய்வதன் மூலம் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும், புதிதாக ஆட்கள் சேர்க்கைக்கு முன் பழைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



