திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பழனி சட்டமன்றத் தொகுதி தலைவர் ஏ.ஜோஸ்வா
அறிவுறுத்தலின்படி பழனி தொகுதி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா தலைமையில் நடைபெற்றது. கொடைக்கானல் நகர மகளிர் அணி செயலாளர் ஷாலினி மற்றும் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி ஆகியோரின் ஏற்பாட்டில்
மூஞ்சிக்கல் மாரியம்மன் கோவிலில் இந்திய ஜனநாயக கட்சியின் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதம் இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பழனி சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி துணைச்செயலாளர் ரீத்தா,
நகர மகளிர் அணி துணை செயலாளர் ஷீபா,
கொடைக்கானல் ஒன்றிய பொருளாளர் ஞானமணி,
கொடைக்கானல் ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் எழில்,
கொடைக்கானல் ஒன்றிய துணைச்செயலாளர் அந்தோணியம்மாள்,
கொடைக்கானல் நகர மகளிர் அணி துணைச்செயலாளர் லிண்டா ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்திய ஜனநாயக
கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாவேந்தர் மற்றும் அகில இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் இணைவேந்தர் கட்சி தொடங்கிய நோக்கத்தில் உயர்ந்த கொள்கைகளை நிர்வாகிகள் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க உறுதிமொழி எடுப்போம் என்று கூறினார்.அதில்
மது இல்லா தமிழகம்,
லஞ்சம் ஊழல் அற்ற தமிழகம்,
விவசாயத்தில் விஞ்ஞானம்
உருது மொழி ,இலவசம் தவிர்த்தல்,
கல்வி மற்றும் மருத்துவம் தவிர
பெண்களுக்கு சம வாய்ப்பு,
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு,இருமுறை மட்டுமே அரசியல் பதவி,அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு, தாய்மொழியுடன் மாற்று மொழி கட்டுதல்,விவசாயம் படித்தவர்களுக்கு வெளிநாட்டுக்கு இணையான சம்பளம் போன்ற 10 உறுதிமொழி எடுக்கப்பட்டது.



