திருவெண்ணெய்நல்லூர், பிப். 19 –
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களை விழுப்புரம் மாவட்ட சப்-கலெக்டர் ஆனந்த் சிங் ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது வட்டாட்சியர் ரகுராமன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் குணசேகரன், சக்திவேல், வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அலுவலர்கள் அப்துல் சலாம், சதீஷ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணராஜ், பாக முகவர் தில்லை.காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



