திருச்சி, ஏப். 29 –
துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த பிரகாஷ், மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



