திருச்சி, ஏப். 22 –
முசிறி அருகே திருத்தியமலை பகுதியைச் சேர்ந்த தனபால், ராமசாமி இருவரும் சகோதரர்கள். சொத்து தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக ராமசாமி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் ஆகியோர் தனபாலை தாக்கி கொலை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.



