கிருஷ்ணகிரி, ஜூலை 13 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் TNHB காலணியை சேர்ந்த மாணவன் வெற்றியானந்தன் நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக தர்மபுரி மாவட்டம் வழியாக ஒசூருக்கு வருகை தந்த
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சி பொருளாளர் விஜய் வசந்த் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான கிறிஸ்டோபர் திலக், கோபிநாத்
ஆகியோருக்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களான எம். சி, ரகு மற்றும் ஹரிஷ்பாபு மற்றும் ஓசூர் மாநகர காங்கிரஸ் தலைவர் சாதிக்ஹான் முன்னாள் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட வெற்றியானந்தனின் வீட்டுக்கு சென்ற இவர்கள் தற்கொலை செய்துக் கொண்ட மாணவன் வெற்றியானந்தனின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து பேசிய மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்: தமிழகத்தில் நீட் தேர்வினால் பரிதாபமாக உயிரிழந்த கோவை, சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதியில் உள்ள
மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நாங்க எல்லோரும் வந்து ஆறுதல் கூறி தங்களது அறுபத்தினை தெரிவித்து உள்ளோம். மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் இருக்க கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ஆகையால் மத்திய அரசு மாணவர்களின் கனவை சிதைக்கும் இந்த நீட் என்னும் அரக்கனை தமிழ்நாட்டில் இருந்து அகற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியின் போராடம் தீவிரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அப்போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பி.சி. சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூத்தி, இராமமூர்த்தி, நாராயண மூர்த்தி வட்டாரத் தலைவர் சித்திக், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் ஜாவித்கான், டாக்டர் தகி, இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சத்திவேல், முன்னாள் அமைப்பு சார மாவட்ட தலைவர் சென்னப்பன், வட்டாரத்தலைவர் மாரியப்பன், மீனவரணி மாவட்ட தலைவர் செல்வம், ஓ,பி,சி, மாவட்ட துணைச் செயலளர் குமார், நகர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீலகண்டன், கீர்த்தி கணேஷ், வாஜித் பாஷா, சுவாமி சீனிவாசன், மைசா அக்பர், ஷானவாஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



