பெரியகுளம், ஜூன் 29 –
தமிழக முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமினை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சபரி ஐங்கரன் எம்எல்ஏ, ஒன்றிய நிர்வாகிகள் சிவநாதன், சக்தி, முருகன் ஆகியோர் அறிவுறுத்தலின் படி பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் குமரேசன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். உடன் சில்வார்பட்டி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



