மார்த்தாண்டம், செப். 12 –
குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு பெற்றது. 400க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
குழித்துறை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏற்கனவே இரண்டு நாட்கள் நடந்தது 11 வார்டுகளுக்கு குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தது.
தாரகை கட்பட் எம்எல்ஏ துவக்கி வைத்தார். குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார அதிகாரி ராஜேஷ், ஆர்.ஐ. செந்தில், மானேஜர் ஸ்டீபன், விஜீ, சாலின் சுஜாதா, ரோஸ்லெட், விஜயலெக்ஷ்மி,
அருள், லலிதா, ஜெலிதா ராணி, ஜீலியட் மெர்லின் ரூத், பெர்லின் தீபா, ரீகன், ரெத்தினமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. 400க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. இறுதியாக 18 முதல் 21 வரை உள்ள நான்கு வார்டுகளுக்கு அடுத்த மாதம் 8 ம் தேதி முகாம் நடைபெறுகிறது.



