தருமபுரி, ஜூன் 17 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி குடிநீர் வசதி, பேருந்து வசதி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பட்டா சிட்டா பெயர் மாற்றம் ஆகியவை வேண்டி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டுமென்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



