தஞ்சாவூர், மார்ச் 19 –
தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் பணிகளை கண்காணிக்கவும், வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்கவும், 8 சட்டமன்றத் தொகுதிக்கு 2 தொகுதிகளுக்கு ஒரு பொது பார்வையாளர் ஒரு செலவீன பார்வையாளர் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு காவல் பார்வையாளர் என இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம் தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் அருண்குமார் மற்றும் செலவின பார்வையாளர் சோமண்ணா, பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் கேஷ்வேந்திர குமார், தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் தினேஷ் செஹரா, செலவின பார்வையாளர் அஸ்வணி குமார் சிங்கால், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர் ஹேமங்ஃபூகன் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் மேற்பார்வையாளர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.



