திருப்பத்தூர், ஏப். 2 –
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புக்குட்டை பகுதியினைச் சேர்ந்த இவர், தேர்தல் வேட்பு மனுவிற்கான டெபாசிட் தொகையான ஐந்தாயிரம் ரூபாயினை ஐந்து ரூபாய் நாணயங்களாக பூ கூடையில் கொண்டு வந்து வழங்கினார்.
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் முருகேசன் வேட்புமனுவினை பெற்றுக்கொண்டார். ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை கொண்டு வந்து வழங்கியதால் அலுவலகத்தில் சுவாரசியமாக இருந்தது.



