திருச்சி, மார்ச் 24 –
திருச்சி மாவட்டம் கொடியாலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சண்முகப்பிரியா குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.



