மார்த்தாண்டம், டிச. 16 –
நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கிளாடி சர்ஜின் (25). குழித்துறை, திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் மகன் பிரதீஷ் (25). இவர்கள் 2 பேரும் பம்மம் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று இருசக்கர வாகனம் ஒன்றை நாகர்கோவில் உள்ள ஷோரூமுக்கு கொண்டு சென்றனர். இரு சக்கர வாகனத்தை பிரதிஷ் ஓட்டினார். கிளாடி சர்ஜின் பின்னால் அமர்ந்திருந்தார்.
மார்த்தாண்டம் கல்லுதொட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்து அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். கிளாடி சர்ஜினுக்கு தீவிர சிகிட்சையளிக்கப்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


