களியக்காவிளை, ஏப். 23 –
களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இவ்வருட சித்திரை பரணி திருவிழா மற்றும் சண்டிகா ஹோமம் ஏப்ரல் 18ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, மதியம் உச்சபூஜை, மாலை சிறப்பு பூஜைகள், புஷ்பாபிஷேகம், இரவு பூஜை நடக்கிறது.
ஏழாம் திருவிழாவாகிய நாளை காலை வழக்கமான பூஜைகள், புஷ்பாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், ஸகஸ்ர நாம அர்ச்சனை, அன்னதானம் மாலை தேவியின் சுயம்பு எழுத்தருளல், இரவு பூஜை, தேவியின் திருசன்னதியில் அக்னி காவடி மற்றும் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. சோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தீ குண்டத்தில் வேல் குத்திய அம்மன் பக்தர்கள் தீமிதித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் காலை நாகருட்டு, சமூக பொங்காலை, பூப்படையும், வேதாளபீடத்தில் குருதியுடன் இவ்வருட திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் திருவிழா சமிட்டியினர் செய்து வருகின்றனர்.


