கலசலிங்கம் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் திறன்மேம்பாட்டு பயிற்சி!
சான்றிதழ் வழங்கல்!!
ஸ்ரீவில்லிபுத்தூர், மே – 1.
கலசலிங்கம் பல்கலையில்,சென்னை கர்ணா வித்யா பவுண்டேஷன் சார்பில் பார்வை குறை மாற்றுத்திறனாளிகளுக்கு
“டேட்டா என்ட்ரி மற்றும் டிஜிட்டல் “குறித்து ஒரு மாத முழு குடியிருப்பு திறன் மேம்பாட்டு பாடத்திட்டம்,
பயிற்சிகள் நடைபெற்றன.
பயிற்சியை முடித்த 8 வது பேட்ச் ,21 மாற்றுத்
திறனாளி மாணவர்களுக்கு சான்றிதழ்களை பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் வழங்கினார்.
திட்ட தலைவர் எஸ்.சாய்குமார், ரெகுராம், ஆகியோர் கணினி ஆய்வுக் கூடத்தில் பயிற்சிகளை வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை பல்கலை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



