ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் , ஐஇஇஇ மாணவர் கிளையுடன் இணைந்து ,மூன்று நாள் சர்வதேச மாநாடு “கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை மற்றும் பொறியியல் மதிப்பீடு”
(ஐசிசிஆர்டிஇஇ-2025) குறித்து மூன்று நாள் சர்வதேச மாநாடு
ஐஇஇஇ சென்னை கிளை தொழில்நுட்ப உதவியில் இணைந்து நடடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பதிவாளர் முனைவர்
வி. வாசுதேவன் துவக்கி வைத்தார்.
மாநாட்டுத் தலைவர் முனைவர் ஆர். ராஜா சுப்பிரமணியன், மாநாட்டின் நோக்கங்களையும் , நிகழ்ச்சி விபரங்களையும் கூறினார் .மேலும் 1347 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 247 தேர்ந்தெடுக்கப்பட்ட
தாகவும் கூறினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ,ஆறு வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
தலைமை விருந்தினர் மலேசியா,ஐஎன்டியுசி பேராசிரியர் தேஷிந்தா அரோவா தேவி துவக்க உரையாற்றி மாநாடு “ஆராய்ச்சிக் கட்டுரை மலரை”வெளியிட்டார்.
இந்தோனேசியா,
பினா தர்மா பல்கலை, பேராசிரியர் ட்ரை பாசுகி, ஐஇஇஇ விருந்தினர் பாண்டிச்சேரி பல்கலை பேராசிரியர் வி. நாகராஜன், மற்றும் ஆந்திரப் பிரதேசம் என்ஐடி ,பேராசிரியர் கார்த்திக் சேஷாத்ரி, ஆகியோர் 6ஜி மற்றும் அடுத்த தலைமுறை ரோபோக்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
கலசலிங்கம் பல்கலை பேராசிரியர்கள்
பி. தீபலட்சுமி,
எம். பள்ளிகொண்ட ராஜசேகரன் மற்றும்
டி. தேவராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.
கே. வெங்கடேஷ் நன்றி கூறினார்.
கணினிப் பள்ளி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



