ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், தடயவியல் அறிவியல் துறை,
“குற்றத் தடுப்பில் காவல்துறை மற்றும் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் எஸ்.நாராயணன் மற்றும் பதிவாளர் வெ. வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கே. அசோகன் உரையாற்றி, சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் சமூகத்தில் குற்றங்களைத் தடுப்பதிலும் இளைஞர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற பல குற்ற நிகழ்வுகளை உதாரணங்கள் கூறினார்.
“தடயவியல்
மாணவர்களுக்கு பட விளக்கத்துடன் ,பல கோணங்களில் சிந்திக்கும். நேரடிப் பயிற்சி அனுபவம் இருந்தால் பல நிகழ்வுகளில் குற்றம் செய்பவர்களே புகார் அளிக்க வருவதை அறியலாம் “என்றார்.
டீன்,சி. ராமலிங்கன், துறைத்தலைவர் எம்.சி. ஜானகி , பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். அனைத்து மாணவர்களும் பங்கேற்று பயனடைந்தனர்



