ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம்பல்கலை , பசுமைப்படை குழு சார்பில் ,லிங்கா குளோபல் பள்ளி மாணவர்களுக்கு “புவி பராமரிப்பு ” பற்றிய விழிப்புணர்வு
எக்கோ பல்ஸ் ’25 நிகழ்ச்சிகள் , பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் அல்கா சர்மா முன்னிலை வகித்தார்.வினாடி வினா,படம்வரைதல், கிசுகிசு சவால் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெடல்,சான்றிதழ், மரக்கன்றுகளை பள்ளி முதல்வர் வழங்கினார்.
பேராசிரியர்கள் கே.செல்வராணி,கே. சுரேஷ்குமார் டி . பிரவீன் எம் . ஜெயந்தி ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



