திண்டுக்கல் குயின் சிட்டி சங்கத்தின் சார்பாக
திண்டுக்கல்லில் உள்ள ஏழை, எளிய நடைபாதை
வியாபாரிகளுக்கு வெயிலிலும், மழையிலும் பயன்பெறும் வகையில் நிழற்குடைகள் 25 நபர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேட் பாய், ராஜிஸ் கிச்சன்ஸ், மகாத்மா மைண்ட் கேர் சென்டர் ஆகிய நிறுவனங்களின் சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம், திண்டுக்கல் நகரின் மைய பகுதி வியாபாரிகள், காட்டாஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபாதை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இது ஒரு முன்னெடுப்பு மட்டுமே. நிழற்குடைக்கான தேவைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. வரும் காலங்களில் இதை இன்னும் நிறைய பேருக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு தொண்டுகளை செய்வோம் என்று திண்டுக்கல் குயின் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.கவிதா மற்றும் செயலர் Rtn. பார்க்கவி கூறினார்கள். பயனாளிகள் மகிழ்வுடன் வாங்கிக் கொண்டதும், நன்றி கூறியதும் நெகிழ்வாக இருந்தது என்று ராஜீஸ் கிச்சன் உரிமையாளர் ராஜாத்தி கமலக்கண்ணன், யோகா ஃபிட்னஸ் பத்மா மகாத்மா மைண்ட் கேர் டாக்டர். ஷர்மிளா பாலகுரு ஆகியோர் தெரிவித்தார்கள்.
எங்கள் நிறுவனம் துவங்கி முதன்முறையாக செய்த சேவை இதுதான். இதை சிறப்பாக செயல்படுத்தித் தந்த குயின்சிட்டி சங்கத்தினருக்கு நன்றி. இனி எங்கள் நிறுவனத்தின் சார்பில் இன்னும் நிறைய சேவைகள் செய்ய காத்திருக்கின்றோம் என்று மேட் பாய் காயர் மிதியடி நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிணி தெரிவித்தார்.



