திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஊராட்சியில்
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்ட ஏராளமான பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஊராட்சி பகுதியில்,தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவ திட்டம், காலை உணவுத்திட்டம், உயர்கல்வி பயலும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம், அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள ”விடியல் பயணத் திட்டம்”, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ”தமிழ்ப்புதல்வன் திட்டம்”,இளைஞர்களுக்கு ‘மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்”, ”கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்”, உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.



