விளாத்திகுளம், அக்டோபர் 04 –
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம், மிட்டாவடமலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.11-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, ஒப்பந்ததாரர் செல்வகுமார் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், திமுக கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



