தென்தாமரைகுளம்., மார்ச். 11. அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதி குழு மானியத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் சீதா தலைமை தாங்கினார், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் அன்பரசி ராமராஜன்,செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ ஆலோசனை குழு உறுப்பினர் பாபு கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள்,திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



