விழுப்புரம், அக்டோபர் 07 –
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு பிளக்ஸ் பேனர் அசோசியேஷன் சார்பில் பியூரிஃபையர் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாநிலத் தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் மஜிஹர்தீன், மாநிலப் பொருளாளர் அஜய் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் சாகுல் வரவேற்றார்.
மாநில துணைத் தலைவர் சுலைமான், காய்ச்சல் பிரிவில் பியூரிஃபையர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் நல சேவகர் அப்பாஸ், பசியில்லா தமிழகம் நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
மருத்துவக் கல்லூரி ஆர்எம்ஒ டாக்டர் ரவிக்குமார், ஏஆர்எம்ஒ வெங்கடேசன், சங்க செயற்குழு உறுப்பினர்கள் சையத் அபுதாஹிர், ரமேஷ் பாபு, அலிசா, காஜா, ஜாவித், ஹூபைப் உள்ளிட்டோர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட நிர்வாகி ரஹ்மதுல்லா நன்றி கூறினார்.



