கன்னியாகுமரி, மார்ச் 12 –
சூரப்பள்ளம் முதல் வலியகுளம் வரை ரூ.37 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகளை கணபதிபுரம் பேரூராட்சி தலைவர் ஸ்ரீவித்யா பொன் சுரேஷ் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
சூரப்பள்ளம் மெயின் ரோடு முதல் வலிய குளம் வரை தார் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கணபதிபுரம் பேரூராட்சி சிறப்பு பொது நிதியிலிருந்து ரூபாய் 37 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது இதற்கான பணிகளை கணபதிபுரம் பேரூராட்சி தலைவர் டாக்டர் ஸ்ரீ வித்யா பொன் சுரேஷ் இன்று துவக்கி வைத்தார். ஊர் தலைவர் தர்ம லிங்கம் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊர் தலைவர் அய்யாசாமி நாடார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், கவுன் சிலர் தேன்மொழி, மாவட்ட விவசாய அணி பொது செயலாளர் பொன் சுரேஷ், சூரப் பள்ளம் பா.ஜ. கிளை தலைவர் சதீஷ், சக்தி கேந்திர பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஆதித்தன், ரகு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



