தஞ்சாவூா், மே 16 –
தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் நடைபெற்றது. மாநகர தலைவர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், ராமசந்திரன், செல்வம், மாநகர செயலாளர் சண்.ராமநாதன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் தமிழ் செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.க, தி.மு.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க, மக்கள் நீதி மய்யம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ம.ஜ.க மற்றும் பல்வேறு கட்சி, இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



