கன்னியாகுமரி, ஜூலை 29 –
திருவட்டார் ஆதிகேசவன் கோயில் நகை திருடபட்டது சம்மந்தமாக கோவில் பூஜாரி நாராயணன் நம்பூதிரி என்பவர் கடந்த 18.2.1995ம் வருடம் திருவட்டார் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் சம்மந்தமாக குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு திருட்டு போன நகைகளை போலிஸார் கைபற்றி பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போதைய தங்கநகைகள் மதிப்பு தொண்ணுறு லட்சம் வெள்ளி நகைகள் மற்றும் ஜாதி கற்கள் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்பு உடையவை தங்க நகைகளை உரிமை கோரி யாரும் முன் வராததால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவுக்கு எதிராக குமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையர் சென்னை, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் உரிய வழிமுறைகள் பின்பற்றி மனுதாக்கல் செய்து நகைகளை பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். பின்னர் தங்க நகைகள் உரிமை கோரி சுசிந்திரம் இணை ஆணையர் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவின் மேல் மேல்முறையீடு வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேற்படி வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசராணை செய்த மாவட்ட அமர்வு நீதிபதி பரமசிவதாஸ் திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோயிலுக்கு சொந்தமான நகைகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையர் பெற்று கொள்ள உத்தரவிட்டார்.


