திண்டுக்கல் ஜூலை: 21
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி தீனச்சந்திரன் அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தந்தை அருள்பணி. எஸ்.மரியநாதன் சே.ச தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் அருட்பணி எம். ஆரோக்கியதாஸ் சே.ச. மற்றும் இயக்கங்கள் மற்றும் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி எஸ்.தெரஸ்நாதன் சே.ச ஆகியோர் முன்னிலை வகிக்க கருத்தரங்கம் தொடங்கியது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.மகேஷ் (ஏடிஎஸ்பி) சேவை என்ற தலைப்பிலும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.டி. சுரேஷ்பாபு சுகாதாரம் என்ற தலைப்பிலும், பயிற்சி மற்றும் வெளியீட்டுப் பிரிவு RIRCOM ராஜபாளையம் இயக்குனர்
வி.ரமேஷ்குமார்,பயிற்சி மற்றும் வெளியீட்டுப் பிரிவு RIRCOM தேனி இணை இயக்குனர் சுதர்சன் சிவமுரளி ஆகியோர் நட்பு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
முன்னாள் ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) ஆலோசகர்கள் ஒய்.ஜெயசீலன், ஐசக் மாதவ ராஜா, சுவக்கீன் அமல்ராஜ் ஆகியோர்கள் பாராட்டுப் பெற்றனர்.
ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவத் தலைவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் (ஏடிஎஸ்பி) பரிசுகளை வழங்கி பாராட்டினர்.மேலும் பேரிடர் காலங்களில் மனித உயிர்களக் காக்கும் சாதனமாக HAM ரேடியோ, அமெச்சூர் ரேடியோ எவ்வாறு செயல்படுகிறது என மாதிரி செயல் விளக்கம் நிகழ்த்தப்பட்டது. ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வினாக்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) ஆலோசகர்
ஆ.அமல்ராஜ், உதவிஆலோசகர்கள் அ.அன்பரசன், ஜெ.அருண்குமார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.



